வீடு, நிலம் வாங்குறீங்களா? பத்திரப் பதிவு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பத்திரப் பதிவு சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முறைகேடாக பதியப்பட்ட பத்திரப்பதிவுகளை அந்தந்த மாவட்டப் பதிவாளர் விசாரணை செய்து ரத்து செய்யும் வகையில் 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து, முறையாக விசாரணை நடத்தாமல் மாவட்ட பதிவாளர், பத்திரங்களை ரத்து செய்வதாக சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணைக்கான காலவரம்பு மற்றும் விதிமுறைகள் இல்லை என்பதால், அதிகார துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என். செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரப்பதிவை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தத்தினை நிறுத்தி வைத்து, விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலதிக செய்திகள்

மேலதிக செய்திகள்

வடக்கில் கடந்த வருடம் 52 பேர் படுகொலை!

எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் – மொட்டுக் கட்சி சூளுரை.

சிங்கப்பூர்க் கப்பல் மோதி பாலம் ஆற்றில் விழுந்தது : மீட்பு நடவடிக்கை பல நாள்களுக்கு நீடிக்கலாம்.

கொரில்லா வேடத்தில் குரங்குக் கூட்டத்தை விரட்டியடிக்கும் ஊழியர்கள்

2024 அக்டோபர் 5ம் தேதி ஜனாதிபதி தேர்தல்

திடீர் பால் தட்டுப்பாடு – வருத்தம் தெரிவித்த ஆவின் நிர்வாகம்!

Leave A Reply

Your email address will not be published.