ஞானசார தேரரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

நான்கு வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரின் மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள நான்கு வருட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில் பிரதிவாதி ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் இந்த பிணை கோரிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர்.

ஞானசார தேரருக்கு தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, பிணை கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.