போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய இந்தியன் 2 பட நடிகை

திரையுலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் பல முன்னணி நடிகைகள் வரிசையாக கைதாகி வருகின்றனர்.

முதல் கட்டமாக கன்னட முன்னணி நடிகைகளான ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு போலீசாரின் தீவிர விசாரணையில் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது சுஷாந்த் சிங் மரணத்தில் கைதான அவருடைய காதலி ரியா சக்கரவர்த்தி அளித்த வாக்குமூலத்தின் படி முன்னணி பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே உட்பட ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் போன்ற 4 நடிகைகள் சிக்கி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழ் மக்களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக மாறிய ரகுல் ப்ரீத் சிங், போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கி இருப்பது ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சூர்யாவுடன் NGK படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நின்றார். அதன்பின் தற்போது பிரம்மாண்ட படைப்பில் தயாராகிவரும் இந்தியன் 2, அயலான் போன்ற படங்களிலும் இவர் கமிட்டாகியுள்ளார்.

இப்படி சினிமாவை நல்ல பெயர் எடுத்து வரும் ரகுல் ப்ரீத் சிங் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கிக்கொண்டு, மத்திய போதைப்பொருள் தடுப்பு அமைப்பிடம் இருந்து செப்டம்பர் 26ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கு பிறகு ரகுல் பிரீத் சிங்கின் சினிமா வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் ரசிகர்களின் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.