மக்களின் கண்ணீர் வெள்ளத்துக்கு மத்தியில் விடைபெறுகிறார் பாலித : நேரலை (Live Video)

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமரர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.

தான் உயிரிழப்பதற்கு முன்னரே களுத்துறை – மத்துகம பகுதியில் தனக்கான கல்லறையைப் பாலித தெவரப்பெரும அமைத்திருந்தார். அந்த இடத்திலேயே அவரின் பூதவுடல் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெருந்திரளான மக்கள் இன்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.