கென்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி உள்ளிட்ட 9 பேர் பலி.

கென்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி உள்ளிட்ட 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்ரிக்க நாடான கென்யாவின் ராணுவ தலைமை தளபதி பிரான்சிஸ் ஒகோல்லா, தன் சக ராணுவ அதிகாரிகளுடன் கென்யா மேற்கே மாகாணமான எல்ஜியோ மாராக்வட் என்ற இடத்தில் ராணுவ ஹெ லிகாப்டரில் சென்று கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பயணித்த ராணுவ தலைமை தளபதி பிரான்சிஸ் ஒகோல்லா உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதனை உறுதி செய்த கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ நாட்டு மக்களுக்கு தொலைகாட்சி வாயிலாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.