8 வயது மாணவன் நீரில் மூழ்கிப் பரிதாப மரணம்!

பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ கட்டுபத மஹாவெவயில் குடும்பத்துடன் நீராடச் சென்ற பாடசாலை மாணவனே நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்துள்ளார் என்று ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டுவ, நல்லதரன்கட்டுவ, இலக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய தினேத் சத்சர என்ற பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.

தாயின் சகோதரி, அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் மற்றுமொரு அயலவர் ஆகியோருடன் நீராடுவதற்காகச் சென்றபோதே மேற்படி மாணவன் இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.