மட்டு. சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தாக்குதல் நினைவேந்தல்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி இன்று மலர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்தக் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் 5ஆம் ஈண்டு நினைவேந்தலையொட்டி சீயோன் தேவாலயத்தில் போதகர் மகேசன் ரொசான் தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றது.

அதேவேளை, குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட் தேவாலயப் பகுதி இதுவரை புனர்நிர்மாணம் செய்யப்படாமல் பூட்பட்பட்டு இருந்து வருகின்ற நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இன்று அங்கு சென்று மலர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.