1700 ரூபா நாள் சம்பளம் வேண்டும்! – கொட்டகலை நகரில் ஆர்ப்பாட்டம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1700 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை நகரில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அமைப்பாளருமான ராஜமணீ பிரசாத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாள் சம்பளமாக வழங்குமாறு வலியுறுத்தி கொட்டகலை நகர வர்த்தகர்கள் கடைகள் அனைத்தையும் மூடி கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.