அனுரவுடன் பேசினேன் .. அவரது திசைகாட்டி அரசாங்கம் வந்தால் நானும் அமைச்சர்தான்.. – மனோ

இன்று இந்த நாட்டில் உள்ள இரண்டு பிரதான கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் பங்கேற்பது தொடர்பில் அனுர திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்ட மனோ எம்.பி., தமது அரசாங்கத்தில் இணைந்து கொள்வது நல்லது என அநுர திஸாநாயக்கவும் சொன்னார் என அவர் மேலும் தெரிவித்தார் .

தற்போதைய நிலவரப்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியே முன்னணியில் இருப்பதாகவும், எனினும், இனிவரும் எந்தவொரு அரசாங்கத்திலும் மனோ கணேசன் அமைச்சராகவே இருப்பார் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.