தொலவத்த மொட்டு கட்சியை விட்டு.. ரணிலுடன் இணைகிறார்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார்.

கட்சியின் சில தலைவர்கள் தன்னைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் கட்சிக்காக தாம் கடுமையாக உழைத்த போதிலும், கட்சியில் தனக்கு இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை எனவும் , பத்தரமுல்லை புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற நியூ அலையன்ஸ் கொழும்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் பக்மஹா விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகவும், வேறு எந்த வேட்பாளரும் பார்வையில் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.