SJB முழுக் கட்சியும் ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும்’ என எம்.பி.க்கள் குழு பரிந்துரை!

தற்போதைய ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்களால் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள பெருமளவிலான கட்சி உறுப்பினர்கள் தற்போது மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாகவும், முழுக்கட்சியும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கட்சிக்குள் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலத்த அழுத்தத்தைச் செலுத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.