விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இன்று(திங்கட்கிழமை )காலை கூடிய ஆட்டுச் சந்தை களை கட்டியது. விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சித்திரை மாதத்தில் தான் பெரும்பாலான கோயில் திருவிழாக்கள், காதுகுத்து உள்ளிட்ட சில சுப விழாக்கள் நடைபெறும். இந்த மாதத்தில் கிராம கோயில்களில் பெரும்பாலும் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள். அதோடு சித்திரை மாதத்தில் காதுகுத்து, சடங்கு உள்ளிட்ட சில சுபவைபவங்களும் நடைபெறும். இதனால், பொதுவாக சித்திரை மாதத்தில் ஆடு, கோழி விற்பனை சந்தையில் களை கட்டும் அதோடு ஆடுகளை வளர்த்து வந்த விவசாயிகளுக்கு விற்பனையின் போது நல்ல லாபம் கிடைக்கும்.

அந்த வகையில், இன்று காலை விராலிமலையில் கூடிய ஆட்டுச் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் அதிகாலையிலேயே விற்பனைக்கு வந்தன. ஆடுகளை வாங்குவதற்கு வெளியூர்களில் இருந்து பல்வேறு வியாபாரிகள் மற்றும் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் சந்தையில் குவிந்தனர். இதனால் கால்நடை வளர்ப்போர் நல்ல லாபம் ஈட்ட முடிந்தது.

இன்று கூடிய சந்தையில் 5 கிலோ எடை கொண்ட வெள்ளாடு 8 ஆயிரத்திற்கும், எட்டு கிலோ எடை கொண்ட ஆடு 11 ஆயிரத்திற்கும், 10 கிலோ எடை கொண்ட ஆடு 15 ஆயிரத்துக்கும் விலை போனதால் கால்நடை வளர்ப்பு மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் விலை அதிகமாக இருந்த போதும் கோயில்களில் நேர்த்திக்கடனுக்கு வெள்ளாடுகள் மட்டுமே பலியிடுவதால் விலையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாங்கி சென்றதால் வர்த்தகம் சுமார் ஒன்றரை கோடியை தாண்டியது.

ஆடு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் இது போன்ற விழா காலங்களில் தான் தாங்கள் உழைப்புக்கு தகுந்த லாபம் ஈட்ட முடிவதாக மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

மேலதிக செய்திகள்

ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பல்லக்கில் சுமந்த மக்கள் (வீடியோ)

கோட்டாபய அழித்த மாலம்பே இலகு ரயில் கனவு, நனவாகிறது.

அதிகாலை வேளையில் பைக் விளையாட்டுக் காட்டிய இளையோர் சிக்கினர்!

எட்கா ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுகின்ற ஏற்பாடுகள் இரகசியமாக முன்னெடுப்பு – விமல் எம்.பி. குற்றச்சாட்டு.

சு.கவின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரி தீர்மானிக்கவே முடியாது! – தயாசிறி கடும் சீற்றம்.

ஆடை விற்பனை நிலையத்தில் பணப்பையை திருடிய பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

விரைவில் அமைச்சராகும் மொட்டுக் கட்சி எம்.பி. யார்?

பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி ஓட்டோ மோதி உயிரிழப்பு!

யாழில் கைபேசி விளையாட்டுக்கு அடிமையான மகனே தனது தாயைக் கொன்றிருக்கலாம்! – பொலிஸார் சந்தேகம்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு’மொட்டு’ பேராதரவு வழங்க வேண்டும்! – எஸ்.பி. கோரிக்கை.

விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய 12 பேர் கைது!

அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

பலாங்கொடையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஹொரணை துப்பாக்கிச்சூடு: வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட பிரதான சந்தேகநபர் மடக்கிப் பிடிப்பு!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

Leave A Reply

Your email address will not be published.