கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் மாயம்.

திருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை என மீனவர்களின் குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 20ஆம் திகதி சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10 மணியளவில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர்.

சல்லி பிரதேசத்தின் 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் (வயது 45), முருகையா சுஜந்தன் (வயது 22) என்பவர்களே காணாமல்போயுள்ளனர்.

இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி மீனவர்களைக் கடலில் தேடும் நடவடிக்கையில் சல்லி பிரதேச மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் மீனவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.