கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் சந்தேக நபர்களில் பொட்ட நௌபரின் மகனும் அடக்கம்…

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களில், நீதிபதி சரத் அம்பேபிட்டிய படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறையில் மரணமடைந்த பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நியாஸ் பொட்ட நௌபரும் அடங்குவார். நௌபருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் , நீர்கொழும்பு பெரியமுல்லையைச் சேர்ந்த 33 வயதான மொஹமட் நுஸ்ரத், கொழும்பு கிராண்ட்பாஸில் வசிக்கும் 27 வயதான மொஹமட் நஃப்ரன், கொழும்பு 13 இல் வசிக்கும் 35 வயதான மொஹமட் ரஷ்டீன். , மற்றும் கொழும்பு மாளிகாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட 35 வயதான மொஹமட் பாரிஸ் ஆகியோர் அடங்குவர்.

மொஹமட் நஃப்ரான் , பொட்ட நௌபரின் மகன் என தெரிய வந்துள்ளது. பாடசாலை வாழ்வை பாதியில் நிறுத்திய நஃப்ரான் , இந்தியாவுக்குச் சென்று இலங்கைக்கு ஜவுளிகளை கொண்டு வந்து விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

2017 இல், அவர் இரத்தின கல் மற்றும் நகைச் சட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். நஃப்ரான் வர்த்தக நோக்கத்திற்காக துபாய் மற்றும் இந்தியாவுக்கு அடிக்கடி பயணிப்பவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட முகமது நஃப்ரான் உள்ளிட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகமதாபாத் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக மின்னஞ்சலில் வந்த தகவல் தொடர்பில் கணினியின் ஐபி முகவரியை வெளிப்படுத்திய விசாரணையின் முடிவில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் கொழும்பில் இருந்து சில நாட்களுக்கு முன் சென்னை வந்து சில நாட்கள் தங்கி , இண்டிகோ விமானத்தில் அகமதாபாத் வந்து பாகிஸ்தான் ஐ.எஸ். தலைவர் ஒருவரோடு கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்பில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது .

சஹாரானின் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த இந்தக் குழு, அப்போது அகமதாபாத்தில் நடைபெறவிருந்த ஐபிஎல் இறுதிப் போட்டியைத் தாக்கி, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் மூவரைத் குறிவைத்து தாக்க திட்டம் தீட்டியிருந்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிள்ளது.

Leave A Reply

Your email address will not be published.