யாழில் மான் கொம்புடன் ஒருவர் சிக்கினார்.

கிளிநொச்சியில் இருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணத்துக்கு மான் கொம்பைக் கொண்டு வந்தவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

யாழ். பிராந்திய பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைதான 42 வயதான சந்தேகநபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.