ISISபயங்கரவாதியைப் பற்றி தகவல் தந்தால் 20 லட்சம் சன்மானம்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதன்படி, சந்தேகநபரின் பல புகைப்படங்களை பொலிஸார் நேற்று (25) ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர், 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெரார்ட், தெமட்டகொட பிரதேசத்தில் வசிப்பவர், சுமார் 05 அடி 06 அங்குலம் உயரம் கொண்டவர்.

குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் 071-8591753 அல்லது நிலைய கட்டளைத் தளபதி 071-8591774 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு 20 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் எனவும் தகவல் வழங்குபவரின் விபரங்கள் இரகசியத்தன்மையுடன் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், பயங்கரவாதிகளும், ஐ.எஸ்.ஐ.எஸ்., ஆதரவாளர்களும், குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் பிடியில் உள்ளார்களா என்பது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஈஸ்டர் ஆணைக்குழுவின் அறிக்கையில் அவதானம் செலுத்தப்பட வேண்டிய பட்டியலை முன்வைத்திருந்த போதிலும், குறித்த குழு தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தவில்லை என பாதுகாப்பு தரப்பினரின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் நான்கு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, மீண்டும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், ஈஸ்டர் ஆணைக்குழுவில் பெயர்கள் உள்ளடங்கிய குழு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் நிலைய பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழுவுக்கு வலுவான அரசியல் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.