வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் நின்றது!

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த விமானம் அவசர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

குறித்த விமானம் இன்று (28) உள்ளூர் நேரப்படி அதிகாலை 05.00 மணியளவில் புறப்படவிருந்ததாகவும் வெடிகுண்டு பீதி காரணமாக விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரணாசி சென்ற விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சந்தேகத்திற்கிடமான எதையும் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.