தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து தோட்ட உரிமையாளர்களின் தீர்மானம் இதோ!

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 1700 ரூபா சம்பள அதிகரிப்பை அரசாங்கம் பரிந்துரைத்தவாறு வழங்க முடியாது என தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேயிலை தோட்ட உரிமையாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் உரிய சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்ததாக அதன் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

இதன்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படக்கூடிய குறைந்தபட்ச சம்பளம் 1380 ரூபா என இலங்கை தோட்டக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தோட்டத் தொழிலாளியின் சம்பளம் 1700 என உயர்த்திய போதிலும், 1380 ரூபா சம்பளமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.