ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் அரசாங்கத்தை விட்டு விலகுவோம்… ஜனாதிபதிக்கு மொட்டு எச்சரிக்கை.

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கத் தயாரானால் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்த உடனேயே, பொதுஜன பெரமுன ஒரு கட்சியாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக சாகர காரியவசம் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிக்கையை அறிந்திருக்கவில்லையென்றால், அது தம்முடைய கருத்து அல்ல, அதற்கு அவர் பொறுப்பல்ல என மக்கள் முன்னிலையில் அறிக்கை விட்டிருக்க வேண்டும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.