அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பல மாற்றங்கள் ?

அடுத்த வாரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் பல மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த எம்.பி.க்களில் மூத்த எம்.பி ஒருவரும் இளம் எம்.பி ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04)விசேட அறிக்கையொன்றை விடுத்து அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தேசிய பத்திரிகையொன்று நேற்று (01) ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜித சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைந்தால் அவருக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.