சஜித்தின் இரத்மலானை கூட்டத்துக்கு கல் வீச்சு : காடையருக்கு பயமில்லை – சஜித் (வீடியோ)

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 29 ஆம் திகதி இரத்மலானை கொத்தலாவலபுரவில் உள்ள ரணசிங்க பிரேமதாச அபார்ட்மென்ட் வளாகத்தின் முன் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

பிரதான விருந்தினர்கள் தங்கியிருந்த மேடையை நோக்கி  காடையர்கள் கற்களை வீசினர், ஆனால் சஜித் பிரேமதாச கல் வீச்சுக்கு அல்ல பீரங்கிக்கும் பயந்து அகலப் போவதில்லை என அவரது பேச்சை தொடர்ந்தார்.

பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டத்தில் உரையாற்றிய திரு. பிரேமதாச, காடையர்களுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன் என்று கூறினார்.

திரு. பிரேமதாச, வீசிய கற்களை சேகரித்து, அந்த பகுதிக்குத் தேவையான சமுதாய மண்டபத்தின் கட்டுமான பணியை  தொடங்குவதாகக் கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.