டில்லி அணி 15 ரன் வித்தியாசத்தில் தோல்வி.

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய டில்லி அணி 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் டில்லி, ஐதராபாத் அணிகள் மோதின. டில்லி அணியில் அவேஷ் கான் நீக்கப்பட்டு காயத்தில் இருந்து மீண்ட சீனியர் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தேர்வானார். ஐதராபாத் அணியில் முகமது நபி, விரிதிமன் சகாவுக்கு பதிலாக கேன் வில்லியம்சன், அப்துல் சமத் இடம் பிடித்தனர்.

நாணய சுழற்சியில் வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களத்தடுப்பை தேர்வு செய்தார். ஐதராபாத் அணிக்கு கப்டன் வார்னர் (45), பேர்ஸ்டோவ் (53), வில்லியம்சன் (41) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. அப்துல் சமத் (12), அபிஷேக் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் ரபாடா 2 விக்கெட் வீழ்த்தினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு தவான் (34), ரிஷாப் பன்ட் (32), ஹெட்மயர் (21) ஆறுதல் தர, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 3, புவனேஷ்வர் குமார் 2 விக்கெட் கைப்பற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.