மீனவர்கள் போல 03 கோடி கேரள கஞ்சாவை கடத்திய இருவர் கைது.

யாழ். நாகர்கோவில் அம்பன் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 28 மில்லியன் பெறுமதியான 70 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

நாகர்கோவில் அம்பன் கடற்பகுதியில் வடக்கு கடற்படை கட்டளை அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான வகையில் டிங்கி படகு ஒன்றை அவதானித்து சோதனையிட்ட போது , அதில் கேரள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். கப்பலில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

02 பைகள் கொண்ட 31 பார்சல்கள் டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை இந்தியாவில் இருந்து கடல் வழியாக மீனவர்கள் கொண்டு வந்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34 மற்றும் 40 வயதுடைய யாழ்ப்பாணம் முள்ளையான் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை கேரளகஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மரதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.