உலகக் கிண்ணப் போட்டிக்கு நான் விரும்பும் அணியை வழங்கவிடில், நான் தலைமை தாங்கமாட்டேன் – வனிது ஹசரங்க.

உலகக் கிண்ணப் போட்டிக்கு தாம் விரும்பும் அணியை வழங்குமாறு இலங்கை அணியின் தலைவர் வனிது ஹசரங்க கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மவன் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

தான் விரும்பும் அணிகளை வழங்காவிட்டால் தலைமை தாங்கமாட்டேன் என தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

அதன்படி தான் உலகக் கோப்பையில் பங்கேற்க விரும்பும் அணியைப் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இலங்கையில் இருந்து உலகக் கிண்ணப் போட்டி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கிண்ணத்திற்குச் செல்வதற்கு முன்னர், அணித் தலைவர் வனிது ஹசரங்கவும் இந்த ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு மிகுந்த நம்பிக்கையுடன் செல்வதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார். தான் கேட்ட அணியை தேர்வுக் குழு வழங்கியுள்ளது என்றும், அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.