அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்வு.

அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வீதி நாடக நிகழ்வின் மூலம் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் கிராம ரீதியாக மக்கள் மத்தியில் நாடக நிகழ்வினை மேற்க்கொள்வதற்கான செயல்திட்டத்தினை  தாய்த்தமிழ் பேரவை ஒழுங்கமைத்து அவ் நாடக நிகழ்வின் ஒத்திகை நிகழ்வு முள்ளியவளைை தாய்த்தமிழ்பேரவையின் காரியாலயத்தில் நடைபெற்றன.

இந்நிகழ்வில் மங்களவிளக்கினை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கை.சுதர்சன் தாய்த்தமிழ் பேரவையின் தலைவர் சி.நாகேந்திரராசா, தாய்த்தமிழ்கலாசாரபேரவையின் பொருளாளர் நா.சிறிதரன் , கலைஞர் புவனாஇரத்தினசிங்கம் , புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் கௌரவ உறுப்பினர் இ.சத்தியசீலன், சமூக செயற்பாட்டாளர் முல்லைஈசன் , தாமரைமாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் ரூபன் செயலாளர் சிவா தாய்த்தமிழ் மகளிர் அமைப்பின் பேரவை உறுப்பினர் ச.றெஜினா ஆகியோர் ஏற்றிவைத்தனர்.


தொடர்ந்து நாடக நிகழ்வு நடைபெற்றன நிகழ்வு தொடர்பான கருத்துரைகளை வைத்திய கலாநிதி கை.சுதர்சன், கலைஞர் புவனாஇரத்தினசிங்கம் , தாய்த்தமிழ்பேரவையின் தலைவர் சி.நாகேந்திரராசா ஆகியோர் வழங்கினர் ஒத்திகை நிகழ்வை தொடர்ந்து கிராம ரீதியாக இந் நாடக நிகழ்வு சமூக செயற்பாட்பாளர்கள், நலன்விரும்பிகள் , தாயக புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்போடு மேற்காகொள்ள தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.