கிளிநொச்சியில் மஞ்சள் உற்பத்தியை ஆரம்பித்து வைத்த அமைச்சர் அருந்திக

தென்னை, பனை மற்றும் கிதுல் உள்ளிட்ட விவசாயப் பண்ணை உற்பத்திகளுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ ளிநொச்சியில் மஞ்சள் உற்பத்தியை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இயக்கச்சிப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றால் அமைக்கப்பட்டுள்ள விவசாயப் பண்ணையில் மஞ்சள் கன்றுகளை நட்டு வைத்து அந்தத் திட்டத்தை அமைச்சர் நேற்று ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன், பனை மற்றும் தென்னை அபிவிருத்தி சபைத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.