ஹாத்ரஸ் சம்பவம்: மாவட்ட எஸ்.பி, டிஎஸ்பி, ஆய்வாளர் உட்பட 5 பேர் பணி இடைநீக்கம்

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக கூறப்பட்ட விவகாரத்தில் அந்த வழக்கை விசாரித்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த விவகாரத்தில் மாநில அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வுக்குழு அளித்த முதல் கட்ட அறிக்கை அடிப்படையில், மாவட்ட கண்காணிப்பாளர் பணியில் இருந்து இடை நீக்கம் செய்ய மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இது தொடர்பாக உத்தர பிரதேச உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர், துணை காவல் கண்காணிப்பாளர் ராம் ஷ்ப்த், ஆய்வாளர் தினேஷ் குமார் வர்மா, உதவி ஆய்வாளர் ஜக்வீர் சிங், தலைமை காவலர் மகேஷ் பால் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.