கம்பஹா போலீஸ் பகுதியிலும் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு

கம்பஹா போலீஸ் பகுதியில் இன்று (06) மாலை 06.00 மணி முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மினுவாங்கொடை, திவுலபிட்டி மற்றும் வேயங்கொட போலீஸ் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே அமுலில் உள்ளது.

வெயாங்கொடைக்கும் கம்பஹாவுக்கும் இடையில் உள்ள அனைத்து ரயில் தரிப்பு நிலையங்களிலும் ரயில்கள் நிறுத்தப்படாது என்று ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய கொவிட் – 19 நிலையைக் கவனத்தில் கொண்டு மேல்மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ரயில் வே கட்டுப்பாட்டு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.