பிராண்டிக்ஸ் தொழிற்சாலையின் ஊழியர்கள் வெளியில் நடமாட வேண்டாம்!

மினுவாங்கொட பிராண்டிக்ஸ் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு அரசாங்கம் சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

மினுவாங்கொடை ப்ரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின்  ஊழியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நாட்டின் எந்த பாகத்தில் இருந்தாலும் வெளியில் நடமாட வேண்டாம்  என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டில், தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து நபர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் அவர்கள் வசிக்கும் பகுதியை விட்டு வெளியேறாது தங்களது வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோவிட் -19 க்கு சாதகமாக சோதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்கான ஆயத்தங்களை செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொள்வதாகவும் ஊடக வெளியீடு மேலும் கூறுகிறது.

சிங்கள மொழியில் வெளியீடு பின்வருமாறு:

BrandixAnnoucement1 670px 20 10 06

Leave A Reply

Your email address will not be published.