லண்டனில் மலேசிய தமிழர் ஒருவர், மனைவி குழந்தையை கொன்று விட்டு தற்கொலை

தமிழ் மக்கள் மத்தியில் தொடரும் கொலைகளும் தற்கொலைகளும்!!
லண்டனில் மனைவியயையும் மகனையும் கொலை செய்தவர் தானும் தற்கொலை!!!

இன்று அதிகாலை ஒரு மணியளவில் தனது மனைவியான  பூர்ணா காமேஸ்வரி (36)  , மூன்று வயதான மகன்  கைலாஸ் குகராஜ் ஆகியோரை  கொலை செய்த கணவரான  குகராஜ் சிதம்பரநாதன் (42) , தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். லண்டன் பிரன்பேர்ட்டில் உள்ள க்ளேபொன்ட் லேனில் இக்கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாரிஸில் ஐவரை படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் இடம்பெற்ற 72 மணி நேரத்தில் லண்டனில் மற்றோர் துயரமாக இந்த அவலம்  நிகழ்ந்துள்ளது. கோவிட்-19 ற்குப் பிறகு லண்டனில் தமிழ் மக்கள் மத்தியில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

இரவு பொலிசார் பலாத்காரமாக சம்பவம் இடம்பெற்ற குடும்பத்தினரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது, நடுத்தர வயது மிக்க பெண்ணும் நடுத்தர வயதான ஆணும் மூன்று வயதேயான கைக் குழந்தையும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

மருத்துவப் பிரிவினர் அவர்களைக் காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்தனர். மருத்துவ வண்டிகள் ஸ்தலத்துக்கு விரைந்து அனுப்பப்பட்டது. வான்வெளி மருத்துவ வாகனமும் தருவிக்கப்பட்டது. இவர்களைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை.

பொலிஸார், கொல்லப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் உறவானவர்கள் என்று தெரிவித்துள்ளனர். தேசம்நெற்கு கிடைக்கும் தகவலின் படி , கணவர் சிவராஜ் தனது மனைவி காமேஸ்வரியயையும் மூன்றே வயதான மகனையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.

இவர்கள் வாழ்ந்த பகுதியும் , இவர்களின் மாடித் தொகுதியும் ஒரு வளம்மிக்க பகுதி. இவர்கள் அயலவர்களுடனும் மிக நல்ல உறவைப் பேணி வந்துள்ளனர். எப்போதும் குடும்பமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பவர்கள் என்று அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இத் தம்பதிகள் மலேசியத் தமிழ் குடும்பத்தினர் எனவும் தெரிய வருகின்றது.

அதிகாலை நான்கு மணியளவில் அவர்களுடைய உடல்கள் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

Police officers stand outside a block of flats where a boy and two adults died

பிந்திய தகவல்கள் :-

இறந்த கணவன் – மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில வாரங்களாக பலத்த வாக்குவாதம் ஏற்பட்டு இருந்ததாக அயவலர்கள் கூறியுள்ளனர்.

மலேசிய கோலாலம்பூரைச் சேர்ந்த இத் தம்பதிகள் திருமணத்தின் பின்னர், பிரித்தானியாவில் குடியேறி இருந்தார்கள், இவர்களுக்கு 3 வயது மகன் ஒருவரும் உள்ளார் என கூறப்படுகிறது.

இவர்களுக்கு இடையே அடிக்கடி பெரும் வாக்கு வாதம் இடம்பெறும் என்றும், அது மணித்தியால கணக்கில் நீடிக்கும் என்றும், கணவர் ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார் என்று என்று அயலவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்று அதிகாலை 1 மணி அளவில் மீண்டும் பெரிய சண்டை மூண்டுள்ளது, ஆனால் இம் முறை அது பெரும் கூச்சலுக்கு பின்னர் திடீரென அமைதியாகிவிட்டது, இதனால் சந்தேகமடைந்த நான் பொலிசாருக்கு அழைப்பை விடுத்தேன், என்று மேலும் அயலவர் கூறியுள்ளார்.

A police officer stands outside he block of flat where the bodies were found

கதவை உடைத்து உள்ளே சென்ற பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அங்கே கணவன் குற்றுயிராக இருந்தார், சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.

தமிழர்களான, குகா (42) மற்றும் பூர்ணா காமேஷா சிதம்பரநாதன்(36) ஆகியோரும், அவர்களது 3 வயது மகனினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.

மேலும் மனைவி 3வயது மகன் மற்றும் அவர்களது நாய் குட்டி கூட கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளது.

– தம்பிராஜா ஜெயபாலன்

 

Leave A Reply

Your email address will not be published.