கொரணா  19 கட்டுப்படுத்தல் வழிகாட்டல் கூட்டம்.

கொரணா  19 கட்டுப்படுத்தல் வழிகாட்டல் குழுவின் 5வது கூட்டமானது காரைதீவு பிரதேச செயலத்தில் இன்று நடைபெற்றது. கொரணா 19 கட்டுப்படுத்தல் வழிகாட்டல் குழுவின் 5வது கூட்டமானது காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின்
அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 07.10.2020 திகதி காலை 9.30
மணிக்கு இடம்பெற்றது.

இதில் தற்போது நாட்டில், குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொட பகுதியில் ஏற்பட்ட நிலைமையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள காரைதீவின் நிலைமைகள் ஆராயப்பட்டன. இதனடிப்படையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டபோது கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளை தேசிய ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் மாவட்ட செயலாளர் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளை கருத்தில்கொண்டு தற்காப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமென தெளிவுபடுத்தப்பட்டது. இதனடிப்படையில் இக்கூட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தல் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் திரு.கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களும்,பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ். ஜீவராணி அவர்களும், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு கே.டி.எஸ்.ஜெயலத் அவர்களும், உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.பார்த்திபன் அவர்களும்,பிரதேச சபை செயலாளர் மற்றும் ஏனைய கொரோனா கட்டுபடுதல் வழிகாட்டு குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.