பஞ்சாப் அணி, 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி.

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் ‘பஞ்சாக’ பறக்க, பஞ்சாப் அணி, 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. துபாயில் நேற்று நடந்த லீக் போட்டியில் ராகுலின் பஞ்சாப், வோர்னரின் ஐதராபாத் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி தலைவர் வோர்னர், துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

ஐதராபாத் அணிக்கு வோர்னர், பேர்ஸ்டோவ் இருவரும் சூப்பர் துவக்கம் கொடுத்தார்கள். பேர்ஸ்டோவ் ஐ.பி.எல்., அரங்கில் ஐந்தாவது அரைசதம் எட்டினார். வோர்னர், தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். இது இவரது 46வது ஐ.பி.எல்., அரைசதம்.
முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்த போது பிஷ்னாய் ஓவரில், வார்னர் (52), பேர்ஸ்டோவ் (97) அவுட்டாகினர். ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் (20) அவுட்டாகாமல் இருந்தார்.

பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் (9), கேப்டன் ராகுல் ஜோடி சுமார் துவக்கம் தந்தது. அப்துல் சமத் வீசிய போட்டியின் 9வது ஓவரில் 4 சிக்சர் உட்பட 28 ரன்கள் எடுத்த பூரன், 17 பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 77 ரன் எடுத்தார். ராகுல் (11), மேக்ஸ்வெல் (7), மன்தீப் சிங் (6) கைவிட்டனர். பஞ்சாப் அணி 16.5 ஓவரில் 132 ரன்னுக்கு சுருண்டுடது. ஆறு போட்டிகளில் பஞ்சாப் அடைந்த ஐந்தாவது தோல்வி இதுவாகும்.

Leave A Reply

Your email address will not be published.