தோட்ட தொழிலாளர்களுக்கு விற்கப்படவிருந்த 500 கிலோ பழுதடைந்த அரிசி மீட்பு.

கொட்டகலை நகரில் தோட்ட தொழிலாளர்களுக்கு விற்கப்படவிருந்த 500 கிலோ பழுதடைந்த அரிசி மீட்பு!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ பழுதடைந்த அரிசி, கொட்டகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் இருந்து இன்று (13) மீட்கப்பட்டுள்ளன.

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் இன்று (13) திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பொது சுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் உட்பட சுகாதார பரிசோதகர்கள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போதே இவ்வாறு 500 கிலோ பழுதடைந்த அரிசி மீட்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இரு வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.