கொரோனா கொத்தணியில் புதிதாக மேலும் 73 பேருக்கு தொற்று.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் புதிதாக மேலும் 73 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 2 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 71 பேர் தொற்றாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இதனையடுத்து நாட்டின் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பிலான தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 1972ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையில் 5 ஆயிரத்து 427 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதில் 3 ஆயிரத்து 395 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.