திருக்கோயிலில் அமெரிக்க தயாரிப்பான துப்பாக்கியும் ரவையும் கைப்பற்றல்

அம்பாரை மாவட்ட திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் அமெரிக்க நாட்டின் தயாரிப்பான துப்பாக்கி ஒன்றினையும் பயன்படுத்திய 40 ரவை மற்றும் புதிய ரவை இரண்டினையும் நேற்றிரவு (17)கைப்பற்றியுள்ளனர்.

சாகாமம் பெரியதிலாவ ஊறக்கை பிரதேசமொன்றில் பிளாஸ்டிக் குளாய் ஒன்றில் நாசுக்கான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த ஆயுதம் கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.டபிள்யு.வி.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டதுடன் குறித்த துப்பாக்கி சுத்தம் செய்யப்பட்டு இயங்கு நிலையில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கைப்பற்றப்பட்ட ஆயுதம் மற்றும் ரவைகளையும் பொலிசாரிடம் ஒப்படைப்பதற்கான பணியினை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

– Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.