மோட்டார் வாகன பரீட்சை மைதானம் திறப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மோட்டார் வாகன பரீட்சை மைதானம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் செயன்முறை பரீட்சை மைதானம் மாங்குளம் வீதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. சாரதிகளுக்கான செயன்முறை பரீட்சை மாதானத்திற்கு இடம் ஒதுக்கப்பட்ட போதும் அது சரியான முறையில் இல்லாத காரணத்தினால் முல்லைத்தீவு மாவட்ட 59 ஆவது படைப்பிரின் ஏற்பாட்டிலும் அவலோன் தனியார் நிறுவனத்தின் ஒத்துளைப்பிலும் சாரதிகள் செயன்முறை பரீட்சை மைதானம் அமைக்கப்பட்டு 59 ஆபது படைப்பிரின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரால் பெரேரா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது

இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் மற்றும் மாவட்ட முதன்மை சாரதி பரீட்சை அதிகாரிகள் மற்றும ;படை அதிகாரிகள் சாரதி பயிற்சி கல்லூரி இயக்குனர்கள் அவலோன் நிறுவத்தின் இணைப்பாளர் ஆகியேர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதுடன் மரக்கன்றுகளையும் நாட்டிவைத்து பார்வையிட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.