நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல்

நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் இருந்து விலகிக் கொள்ளும் வகையில் நன்றி வணக்கம் என்று பதிலளித்திருந்தார். இதன் பின்னரும் அவரது மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக கனிமொழி எம்பி ஒருவர் கூறும்போது; விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட.

பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று வலியுறுத்தி இருக்கிறார்.

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 800 திரைப்படம் பெரும் சர்ச்சையாக இணையதளங்களில் சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுகிறாரா மாட்டாரா என்ற கருத்தும் நிலவி கொண்டிருக்கிறது. இந்த சூழலில் நேற்று முத்தையா முரளிதரன் தனது படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதி கோரிக்கை வைத்தார்.

இதற்க்கு பதிலளித்த விஜய் சேதுபதி, நன்றி வண்ணக்கம் என்று பதில் அளித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து அவர் படத்திலிருந்து விலகபோகிறார் என்பது உறுதியாக இருக்கின்றது. இருப்பினும் அவரது மகளுக்கு இதுபோன்ற கற்பழிப்பு மிரட்டல்கள் செல்வது ஆபத்தானது என்று கனிமொழி எம்பி அவர்கள் கூறியிருக்கிறார்.

அதோடு நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா அவர்களும் விஜய்சேதுபதிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர். ஒரு நடிகன் தான் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் அவனை யாரும் கட்டுப்படுத்த கூடாது என்றும் சரத்குமார் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave A Reply

Your email address will not be published.