மட்டக்களப்பு தேற்றாத்தீவில் வேக கட்டுப்பாட்டை இழந்த விபத்து.

இன்று காலை மட்டக்களப்பு தேற்றாத்தீவு பிரதேசத்தில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

கண்டியிலிருந்து கல்முனை நோக்கி மட்டக்களப்பு பிரதான வீதி வளியே பயணித்துக் கொண்டிருந்த கார் தேற்றாத்தீவு பிரதான வீதியில் உப தபாலகத்திற்கு அருகாமையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரை செலுத்திச் சென்ற சாரதியின் கவனயீனம் காரணமாக வீதியினை விட்டு விலகி வீதியோரம் அமைக்கப்பட்டிருந்த வடிகால் கட்டமைப்பில் மோதியே இவ் விபத்து சம்பவித்திருக்கின்றது

இவ் விபத்தின் போது காரிலிருந்த இருவர் சிறு காயங்களுடன் அதிஸ்ரவசமாக உயிர் தப்பினர் இக் காரானது கண்டியிலிருந்து கல்முனை நகருக்கு விற்பனைக்காக கொண்டு வந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.