முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் வாணி விழா.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் வாணி விழா 2020

மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று(23) வெள்ளிக்கிழமை காலை 09.00மணிக்கு புதிய மாநாட்டு மண்டபத்தில் வாணி விழா 2020 சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பாடல்கள், கவிதை, வயலின் இசை, கவிதை, பட்டிமன்றம், வில்லுப்பாட்டு என பல்துறைசார் கலை நிகழ்வுகளுடன் வாணி விழா சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வரவேற்பு நடனம் வழங்கிய மாவட்ட செயலக உத்தியோகத்தரின் மகள் மற்றும் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பரிசில் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.

வாணி விழா நிறைவின் பின்னர் கிளை ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்று வருகின்ற பூசை வழிபாடுகளின் இன்றைய தினத்திற்குரிய பூசை வழிபாடுகளின் நிறைவில் பிரசாதங்கள் மற்றும் அன்னதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பக்தி பூர்வமாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.