புதுக்குடியிருப்பில் மேலும் 39 பேருக்கு கொரணா.

முல்லைத்தீவில் மேலும் 39 பேருக்கு கொரோனா!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 68-வது படைப்பிரிவின் திம்பிலி பகுதியில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த 20 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது.

பேலியகொடை பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட 146 பேரில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களை கொரோனா சிகிச்சை வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.