மினுவாங்கொடை மற்றும் பேலியகொடையில் கொரோனா 4000 பேரை கடந்து விட்டது

நேற்றைய தினம் மாத்திரம் 368 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மினுவாங்கொட, பேலியகொட தொடர்பாளர்கள் எண்ணிக்கை 4050 யை தாண்டியுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3ஆயிரத்து 714 ஆக காணப்படுகின்றது.

மேலும், 3ஆயிரத்து 792 பேர், நாட்டிலுள்ள 27 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.