16வது கொரோனா உயிரிழப்பு !

கொழும்பு கொம்பனித்தெருவை சேர்ந்த 70 வயதுடைய ஆணொருவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார். கொரோனவால் இடம்பெற்ற 16 ஆவது மரணம் இதுவாகும்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.

அவர் தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

குறித்த நபர், இரத்தத்தில் கிருமி நுழைந்தமை தொடர்பான சிக்கல் நிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று காரணமாக இந்த வாரத்தில் இலங்கையில் பதிவான 3ஆவது மரணம் இதுவாகும்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இறப்புகள் 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தொடர்ந்து பதிவாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.