கள்ளக்கடல்; ராட்சத அலையில் சிக்கி 8 பேர் பலி; மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு – முதல்வர் இரங்கல்!

ராட்சத அலையில் சிக்கி 8 பேர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமைதியாக கிடக்கும் கடல், எந்தவித மாற்றங்களும் இன்றி திடீரென கொந்தளித்து கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதையே `கள்ளக்கடல்’ என்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன் கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக ரெட் அலெர்ட் விடப்பட்டிருந்தது.

தமிழகம் மற்றும் கேரளா கடல் பகுதிகளில் பல அடி உயரத்துக்கு பெரிய அளவிலான அலைகள் திடீர் திடீரென எழும் எனவும், கடல் அலை கரையில் நீண்ட தூரம் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தேசிய கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மற்றும் திருச்சியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். போலீசாரின் எச்சரிக்கையும் மீறி கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் அருகே கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது கடலில் குளித்தபோது 6 பேரை அலை இழுத்துச் சென்றது.

இதில் 5 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். ஒரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் தந்தை மற்றும் மகள் 7 வயது மகளை ராட்சத கடல் அலைகள் இழுத்துச் சென்ற நிலையில் தந்தை மற்றும் மீட்கப்பட்டார். பிறகு சிறுமி உயிரிழந்து மீட்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து கடலில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘தன் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். மருத்துவ மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கு பேரிழப்பு.

தகவல் கிடைத்ததும் ஆட்சியர்களைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றுத் தரப்படும். காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்க உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.

மேலதிக செய்திகள்

இராவணன் மீண்டும் எழுவானா? – (உபுல் ஜோசப் பெர்னாண்டோ)

ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் எதிர்கொள்ள நான் தயார்! – சஜித் சூளுரை.

யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் இன்று கைது!

சாவகச்சேரி வைத்தியசாலையில் மேல்நிலை அதிகாரியைத் தாக்கிய தாதி கைது!

மஹரகம வடிகாலில் ஒரு தொகை கடவுச்சீட்டுகள்.

இந்தோ பசிபிக் பிராந்திய இயக்குனருக்கும் NPP தலைவருக்கும் இடையே சந்திப்பு!

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஹமாஸ் : எகிப்து மற்றும் கத்தாரில் இருந்து போர் நிறுத்த முன்மொழிவு.

இந்த எதிர்ப்புக் கோசம் எந்த இலவசக் கல்வி பற்றியது ? – குசல் பெரேரா

ராஃபாவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றும் இஸ்ரேல்.

சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டு கியூஆர் குறியீட்டுக் கட்டண முறையைத் தொடங்க ஜப்பான் இலக்கு.

சிறைபிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான்.

தமிழகக் காவல்துறை இணையத்தளத்தை முடக்கிய இணைய ஊடுருவல்காரர்கள்.

சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன் +2 தேர்வில் சாதனை.

அல்ஜசீரா இஸ்ரேல் அலுவலகத்தில் சோதனை.

ஓட்டு போட்டால் மசால் தோசை இலவசம்!!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா ஹோட்டல்

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞருக்கு எதிராகச் சட்டம் பாயும்.

நான் ஜனாதிபதியானவுடன் தமிழர்களுக்குத் தீர்வு! – சஜித் சத்தியம்.

பொன்சேகாவுக்கு எதிரான சஜித் அணியின் மனு மே 21 ஆம் திகதி விசாரணைக்கு!

Leave A Reply

Your email address will not be published.