துமிந்தவை விடுவிக்கக் கோரி மனோ அணி அரசுக்கு ஆதரவாக கையெழுத்து

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி ஆளுங்கட்சி எம்.பிக்களால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள மனுவில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எம்.பிக்களும் கையொப்பமிட்டுள்ளனர் என்று சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன், அ.அரவிந்குமார் மற்றும் மேலுமொரு எம்.பி. இவ்வாறு கையொப்பமிட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திலேயே தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிட்டது.

Leave A Reply

Your email address will not be published.