கிளிநொச்சியில் சிக்கிய கஞ்சாப் பொதிகள்.

கிளிநொச்சி, புளியம்பொக்கணைப் பகுதியில் சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன.
அதனை மறைத்துச் சென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
நேற்று புதன்கிழமை பகல் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.