தண்டவாளத்தில் உறங்கிய ரயில் கடவை மேற்பார்வையாளர் ரயில் மோதி பரிதாப உயிரிழப்பு!

ரயில் கடவை மேற்பார்வையாளர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரகும்புர – அம்பேவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் கடவையில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை, தியத்தலாவை பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இவர் கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயில் மோதியே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் குறித்த ரயில் கடவையின் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் சம்பவ தினத்தன்று ரயில் தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் அதே ரயிலில் ஏற்றப்பட்டு அம்பெவெல ரயில் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.