பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி!

மறைந்த பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸுக்கு வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாப்பரசரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அன்னாரது திருவுருவப் படத்துக்கு ஒளித்தீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பாப்பரசரின் மறைவையொட்டி துயரடைந்திருக்கும் உலக கிறிஸ்தவ மக்களின் துயரத்தில் நாங்களும் கலந்துகொள்கின்றோம் என்று அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.