“பகிடி வதையை எதிர்த்த மாணவர் வைத்தியசாலையில் – 6 மாணவர்களுக்கு வகுப்பு தடை!

ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவரொருவரை தாக்கியதற்காக, 6 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய மாணவர்களுக்கு பகிடி வதை செய்வதை எதிர்த்து பேசியதற்காகவே, அந்த மாணவர் தாக்கப்பட்டதாக துணைவேந்தர் பேராசிரியர் பத்மலால் எம். மாணகே தெரிவித்தார்.

தாக்கப்பட்ட மாணவர் தற்போது வெலிகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹோமாகம பொலிஸில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.