டேன் பிரியசாத் கொலை – சந்தேகநபரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்ற அனுமதி!

டேன் பிரியசாத் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, “கட் பந்து” என்ற பெயரில் அறியப்படும் சந்தேகநபரை, 48 மணிநேரம் காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

இந்த சந்தேகநபர் நேற்று குறுந்துவத்த பகுதியில் கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

போலீசார், விசாரணையின் தற்போதைய நிலையை விளக்கும் அறிக்கையுடன்,
சந்தேகநபர் குற்றத்தில் ஈடுபட்டதைக் குறிக்கும் விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், சந்தேகநபரை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணை நிலையை அடுத்த நாளில் நீதிமன்றத்தில் மீண்டும் அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.