நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் நேற்று செவ்வாய்க்கிழமை நெல்லியடி பஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டதுடன், சுடர் ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.